வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான சட்ட வல்லுநர்கள் குழு உலக நாடுகளில் உள்ள சட்டங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து ஒரு சட்ட முன்வடிவை அரசு பரிந்துரை செய்து இந்திய அரசியலமைப்பு சபையால் அந்த முன்வடிவு அங்கீகரிக்கப்பட்ட நாள் நவம்பர் 26-ஆம் தேதி ஆகும்.



அந்நாளை சட்ட நாளாக கொண்டாடப்படும் வகையில் இன்று வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிபதி ஆறுமுகம் தலைமை வகித்தார். வால்பாறை வழக்கறிஞர் சங்க செயலாளர் பெருமாள் வரவேற்புரை ஆற்றினார். வால்பாறை வனச்சரக அலுவலர் சக்திவேல், மாணாம்பள்ளி வனச்சரக அலுவலர் சேகர், நகராட்சி பொறியளர் ராஜகோபால், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகானந்தம், வால்பாறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். ஆனந்தன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.



இந்நிகழ்ச்சியில், வழக்கறிஞர்கள் பால்பாண்டி, சுமதி, வினோத்குமார், அன்பு நாகராஜன் உள்ளிட்ட பல நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, இந்நிகழ்ச்சியில் நீதிபதி ஆறுமுகம் பேசுகையில், பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளுக்கு இலவசமாக நீதிமன்றத்தை நாடி சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் குறித்து பேசினார்.

இதனைத்தொடர்ந்து, முகாமில் பெரும்பாலான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...