500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற கால அவகாசம் கோரி த.மா.கா-வினர் ஆர்ப்பாட்டம்

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த 8ம் தேதியன்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அந்த ரூபாய்  நோட்டுக்களை மாற்றிக் கொள்ள டிசம்பர் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு முன்பு சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் வங்கிகளில் போதுமான பணம் இல்லாத சூழல் நிலவி வருகிறது. இதனால், அன்றாடம் பொதுமக்கள் தங்களது பணியையும் விட்டுவிட்டு வங்கியிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும், நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய் மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் என்பதால் பொதுமக்கள் மத்தியில் பெருத்த சிரமங்கள் நிலவி வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மத்திய அரசு இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்றும், பணத்தை மாற்ற தவிக்கும் மக்களுக்கு உரிய நேரத்தில் பணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...