கேழ்வரகின் விலை விவசாயிகளை மகிழ்விக்கும் என வேளாண் பல்கலைக்கழகம் தகவல்

கேழ்வரகு சிறுதானிய பயிர்களில் மிக முக்கியமான உணவுப் பொருளாகவும், மிகுந்த ஊட்டச்சத்து வாய்ந்ததாகவும், சேமித்து வைக்க ஏதுவானதாகவும் உள்ளது. இந்திய தேசிய வேளாண்மை அமைச்சகத்தின் நான்காம் முன் மதிப்பீட்டின் படி, 2015- 16 ஆம் ஆண்டில் கேழ்வரகு 1.20 மில்லியன் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 1.79 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

கேழ்வரகு உற்பத்தியில் கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திர பிரதேசம், உத்திரகாண்ட், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம் மற்றும் இமாச்சல் பிரதேசத்தின் மலைப்பாங்கான பகுதிகள் பெரும் பங்கு வகிக்கிறது.

தமிழ்நாட்டில் பொருளாதாரம் மற்றும் புள்ளியல் இயக்குனரகம் மதிப்பீட்டின்படி 2014- 15 ஆம் ஆண்டு கேழ்வரகு 0.11 மில்லியன் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 0.25 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து மாநிலத்தின் மொத்த கேழ்வரகு உற்பத்தியில் 87 சதவிகிதம் உற்பத்தி செய்யப்படுகிறது.

டிசம்பர் மாத இறுதியில் கேழ்வரகின் சந்தை வரத்து ஆரம்பமாகிறது. இதனை தொடர்ந்து, வருடம் முழுவதும் சேமித்து வைத்து பயன்படுத்தப்படுகிறது. சாதகமற்ற பருவ மழையின் காரணமாக கேழ்வரகின் உற்பத்தி தமிழகத்தில் குறைந்துள்ளது. எனவே, கேழ்வரகிற்கு தேவை அதிகமாக இருப்பதால் வரும் மாதங்களில் நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில் விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக கடந்த 10 ஆண்டுகளாக திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய கேழ்வரகு விலையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் கீழ் இயங்கி வரும் விலை முன்னறிவிப்பு திட்டம், ஆய்வு செய்து சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வு முடிவின் அடிப்படையில் தரமான கேழ்வரகின் பண்ணை விலையானது கிலோவிற்கு ரூ.20 முதல் 22 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனைகளின் படி விதைப்பு முடிவுகளை எடுத்தால் அதிக பயன்பெறலாம்.

இதுகுறித்தான மேலும் விவரங்களுக்கு உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை - 641 003 என்ற முகரிக்கோ, அல்லது, 0422- 2431405 என்ற தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...