கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத சம்பவங்களில் ஈடுபட அனுமதி கோரி விவசாயி மாவட்ட ஆட்சியரிடம் மனு


வாங்கிய கடனுக்கு அதிகமாக வங்கிகள் வட்டி வசூலிப்பதால் வங்கிகளுக்கு பணம் செலுத்த கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத சம்பவங்களில் ஈடுபட அனுமதி வழங்கக் கோரி விவசாயி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று (இன்று) விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளித்தனர். இதனிடையே அன்னூர் அருகே குப்பேபாளையம் பகுதியை சேர்ந்த துப்பாக்கி வேலுசாமி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். 

அம்மனுவில் பயிர்க் கடனுக்கு வங்கிகள் அதிகளவு வட்டியை வசூலிப்பதால் அதனை திரும்ப செலுத்த முடியாமல் தவிப்பதாக தெரிவித்திருந்தார். எனவே தனது பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் இல்லையேல் விரைவாக பணம் சம்பாதிக்கும் வகையில் கொள்ளை, திருட்டுகள், கஞ்சா பயிரிடுதல், தீவிரவாதம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலுச்சாமி, காலம்காலமாக விவசாயம் செய்து வரும் தாங்கள் கடந்த சில ஆண்டுகள் வரை சரியான முறையில் வங்கி கடன்களை திரும்ப செலுத்தி அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற்றுள்ளதாக தெரிவித்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மழை பொய்த்து போனது, மின்வெட்டு, உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமை உள்ளிட்ட பிரச்சனைகளால் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருவதாகவும், இந்நிலையில் வங்கிகளும் வாங்கிய கடனுக்கு மேல் வட்டி கட்டுமாறு மிரட்டுவதாகவும் வேதனை தெரிவித்தார். 

எனவே, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் விவசாயிகளை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு முடியாத பட்சத்தில் வேறு வழியின்றி தங்கள் பிள்ளைகள் தீவிரவாதம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் அவல நிலை உருவாகும் எனவும் அவர் அப்போது வருத்தத்துடன் தெரிவித்தார்.

இதேபோல, கோவை பேரூர் பகுதியில் வாழை விவசாயம் செய்து வரும் விவசாயி வாழை பயிரிட்டு 1000 வாழைகளை அறுவடை செய்யும் நிலையில் இருப்பதால் மத்திய அரசு அறிவித்தப்படி 2.5 லட்சம் ரூபாய் மட்டுமே வங்கியில் கட்ட முடியும். ஆனால், ஒரு வாழை 500 ரூபாய் வீதம் விற்பனையாகிக்கொண்டிருக்கும் நிலையில் 5 லட்சம் வரும் பணத்தை வங்கியில் வைப்பு வைத்தால் வருமானவரித்துறை பிரச்சனை, வாழையை வாங்குபவர்கள் ரசீது கொடுக்காததால் விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், தமிழக அரசின் கீழ் விவசாயம் சார்ந்த பொருட்களை வாங்குபவர்கள் தங்களது நிறுவனத்தை பதிவு செய்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...