காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை


கோவையில் காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கலிக்கநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன் சுபாஷ் (19). இவர் கோவையை அடுத்த கணியூரில் உள்ள தனியார் ஆலை ஒன்றில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்த சுபாஷ், சக ஊழியர்கள் நான்கு பேருடன் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில், நேற்று காலை வீட்டில் இருந்த சக ஊழியர்கள் அனைவரும் வேலைக்கு சென்றுவிட சுபாஷ் மட்டும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். மேலும், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வேலைக்கு சென்றவர்கள் வீடுதிரும்பிய போது, சுபாஷ் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் சுபாஷின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, சுபாஷ் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் கிடைத்தது. அதில், காதல் தோல்வியால் தான் தற்கொலை செய்து கொள்வதாக சுபாஷ் எழுதியுள்ளார். இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...