கேரளத்தில் கொல்லப்பட்ட 3 மாவோயிஸ்ட்டுகள் குறித்து நீதி விசாரணை நடத்த கோவையில் பிடிபட்ட மாவோயிஸ்ட்டுகள் கோரிக்கை

கேரள மாநிலத்தில் 3 மாவோயிஸ்ட்கள் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதாகவும், இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டுமெனவும் கோவையில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதிகளாக உள்ள மாவோயிஸ்ட்டுகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் வலியுறுத்தினார்.



கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த 2015 ம் ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத்தினர் ரூபேஸ், சைனா, வீரமணி, கண்ணன், அனூப் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்ட விரோத செயல்கள் தடுப்புசட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு  கோவை முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்த குற்றப்பத்திரிகைகளின் சுமார் 4200 பக்க நகல்கள் மாவோயிஸ்ட் இயக்கத்தினருக்கு வெள்ளியன்று (இன்று) வழங்கப்பட்டது. 

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகின்ற டிசம்பர் மாதம் 8 ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முதன்மை நீதிபதி பொறுப்பு கிறிஸ்டோபர் உத்தரவிட்டார். 



இதற்கு முன்னதாக, நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட மாவோயிஸ்ட்கள், கேரளாவில் மாவோயிஸ்ட் இயக்கத்தினர் 3 பேரை சுட்டுக்கொன்றதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். சுட்டு கொல்லப்பட்ட 3 பேரும் போலி என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற பிறகு மாவோயிஸ்ட்கள் 5 பேர் மீதும் காவல் துறையினர் போலி ஆவணங்களை பயன்படுத்து சிம்கார்டு வாங்கியதாக தமிழகம் மற்றும் கேரளாவில் மொத்தம் 28 பொய் வழக்குகள் போடப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் மீது குற்ற வழக்குகள் இல்லாத போதும் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் வழக்குகள் போடப்பட்டு இருப்பதாகவும் அவர்களது தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன் தெரிவித்தார். 

மேலும், மாவோயிஸ்ட்டுகள் மீது சிறையில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும், உரிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமெனவும் நீதிபதியிடம் மாவோயிஸ்ட்கள் புகார் தெரிவித்ததாகவும், சிறை கண்காணிப்பாளர் மூலம் புகார் தெரிவிக்குமாறு நீதிபதி அறிவுறுத்தியதாகாவும் அவர் தெரிவித்தார். 

இதையடுத்து மாவோயிட்கள் 5 பேரும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...