500, 1000 ரூபாய் தடையால் தங்க நகை தயாரிப்புத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியரிடம் மனு

மத்திய அரசின் 500, 1000 ரூபாய் தடை அறிவிப்பால் தங்க நகை தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் பல ஆயிரம் குடும்பத்தினர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியடம் மனு அளிக்கப்பட்டது.



அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது:-

அகில இந்தியா அளவில் தங்க நகை தயாரிப்பில் கோவை மாவட்டம் மூன்றாம் இடம் என்பது உலகறிந்த உண்மை. இத்தொழிலை நம்பி சுமார் ஒரு லட்சம் பேர் வாழ்ந்துவருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 8ம் தேதியன்று மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என அதிர்ச்சி தகவல் வழங்கியது. இதனால், கடந்த 15 நாட்களாக தங்க நகை வியாபாரிகள் வழங்கும் ஆர்டர் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தயார்நிலையில் உள்ள புதிய தங்க நகைகள் விற்பனையும் முற்றிலும் பாதிக்கப்பட்டு விற்பனை செய்யமுடியாமல் உள்ளது.

இத்தகைய மோசமான சூழ்நிலையினால் இத்தொழிலை நம்பியுள்ள சுமார் 55 ஆயிரம் குடும்பத்தினர் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை நீடித்தால்,  தொழில் சமுதாயத்தில் மிக பெரிய வெற்றிடம் ஏற்படும்.

இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசுக்கு மாவட்ட அரசின் மூலம் விரைவில் மக்கள் வங்கியில் செலுத்திய பணத்தை புழக்கத்திற்கு வழங்க வேண்டி அழுத்தம் தர வேண்டும்'' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...