இந்திய உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு பேரணி


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று (இன்று) இந்திய உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். 



சுமார் 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்பேரணி, உடல் உறுப்பு தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நகரின் முக்கிய வீதி வழியாக சென்று கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிறைவடைந்தது.



இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பேசுகையில்:

"இந்திய உடல் உறுப்பு தான நாள்" இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் முக்கியத்துவத்தை பொது மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும். உடல் உறுப்புகள் தானம் செய்வதன் முலம் ஒருவருக்கு உயிர் கொடுக்க உதவுகிறோம் .

இதை இன்றைய இளைய சமுதாயம் முதல் பொது மக்கள் அனைவரிடத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி பயன்பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்தார்.



இப்பேரணியில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் எட்வின்ஜோ, முதலைமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்ட ஒருங்கிணைப்பளர்கள் சீனிவாசன், மோகன் மற்றும் மருத்துவர்கள், அரசு அலுவலர் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...