500 ரூபா நோட்டு சவ ஊர்வலம் மார்க்சிஸ்ட் கட்சி நூதன போராட்டம்


செல்லாது என அறிவித்து நாட்டு மக்களை தெருவில் நிறுத்திய 500 ரூபாய் நோட்டுக்கு மாலை அணிவித்து சவ ஊர்வலமாக மார்க்சிஸ்ட் கட்சியினர் எடுத்துச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.



நாட்டு மக்களின் 80 சதவீத புழக்கத்தில் உள்ள ரூ 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அவகாசம் தராமல் ஒரே இரவில்   பிரதமர் மோடி தடாலடியாக அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இரண்டு நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என மக்களின் எதிர்ப்பை சரிகட்ட சமாளித்தார். ஆனால்  இரண்டு வார காலம் கடந்த பின்னும் சரியாகவில்லை என்பது மட்டுமல்லாமல் மேலும், மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பொதுமக்களின் போராட்டம் வெடித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக பெரியநாயக்கன்பாளைய ஒன்றியத்திற்குட்பட்ட தொப்பம் பட்டி பிரிவில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். 



முன்னதாக செல்லாது என அறிவித்த ரூ 500 பழைய நோட்டுக்கு சவ மாலை அணிவித்து நூதன போராட்டத்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து ஊர்வலமாக சென்ற போராட்டக்காரர்கள் தொப்பம்பட்டி பிரிவில் உள்ள ஆந்திர வங்கியின் முன்பு  மோடி அரசின்  துக்ளக் தர்பார்  நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். 

இந்த போராட்டத்திற்கு சண்முக கனி தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் பெரிய நாயக்கன்பாளைய ஒன்றிய செயலாளர் என்.பாலமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கண்ணன், தேவராஜ், கோகுலகிருஷ்ணன், பழனிச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 

மார்க்சிஸ்ட் கட்சியின் நூதன போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...