நஷ்டம் ஏற்பட்டதால் தொழிலதிபர் தற்கொலை

கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர் ஆள்கடத்தல் பிரிவில் உதவி காவல் ஆய்வாளராக உள்ளார். செல்வகுமார் பணியன் வியாபாரம் செய்துவந்தார். தொழிலில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூர் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு வீட்டைவிட்டு புறப்பட்டுச் சென்றார். மேலும், சித்தாப்புதூர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினார். 2நாட்களாக அறை கதவு திறக்கப்படாத நிலையில், உள்ளே இருந்து துர் நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் நேற்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது  செல்வகுமார் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

தொடர்ந்து, விடுதி ஊழியர்கள் பந்தைய சாலை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செல்வகுமாரின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைகு அனுப்பினர். தொடர்ந்த் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...