சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு நாடகம்


கோவை: புரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் இன்று மாலை பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ரூட்ஸ் நிறுவனம் மற்றும் கோவை மாநகர போக்குவரத்து சார்பில் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. கோவை மாநகர துணை ஆணையர் சரவணன் தலைமை தாங்கினார்.



இந்நாடகம், ரூட்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் இணைந்து பயணத்தில் விபத்துக்கள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை நாடகத்தின் மூலம் பொதுமக்களுக்கு விளக்கினர். அதில், பயணம் செய்யும் போது, மது அருந்தி விட்டு பயணம் செய்வது, தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்வது, கைபேசி பேசிக்கொண்டு பயணம் செய்வது, சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்வது போன்ற பல்வேறு விதமான செயல்களால் சாலை விபத்து ஏற்படுகிறது. என்பதை நாடகத்தின் மூலம் விளக்கினர்.







பின்னர், இது குறித்து கோவை மாநகர துணை ஆணையர் சரவணன் பேசுகையில், இந்நாடகத்தின் மூலம் பொதுமக்கள் சாலை பயணத்தின் போது தங்களது தவறை சரிசெய்து கொள்ளவேண்டும் என்றும் சாலை விதிகளை பின்பற்றியும் விலைமதிப்பில்லா இந்த உயிரை காப்போம் என்றும் கூறினார்.



இதில், ரூட்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் கவிஞர் கவிதசன், கோவை மாநகர உதவி ஆணையர் மாகுடபதி, போக்குவரத்து மேற்கு காவல் ஆய்வாளர் சதாசிவம், கிழக்கு காவல் ஆய்வாளர் ஐயர்சாமி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சரவணன் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...