வால்பாறை வனத்தில் காட்டெருமை விரட்டியதால் வனக்காப்பாளர் உயிரிழந்தார்


வால்பாறை வனச்சரகம் அக்காமலை புல்லுமேடு பகுதியில் செவ்வாயன்று காட்டெருமை விரட்டியதால் நெஞ்சுவலி ஏற்பட்ட வனக்காப்பாளர் சங்கிலிப்பாண்டி என்ற கணபதி (57) உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து வால்பாறை வனக்காப்பாளர் திருமலைசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரில் கூறியுள்ளதாவது :- 

அக்காமலை பகுதியில் எனது தலைமையில் தர்மராஜ், சங்கிலிப்பாண்டி ஆகியோர் கோனலாறு வேட்டைத் தடுப்பு முகாமிற்கு நேற்று காலை சென்றோம் . ரோந்து பணியில் இருந்த போது எதிர்பாராத விதமாக காட்டெருமை விரட்டியது. இதில் மூன்று பேரும் சிதறி ஓடினோம். 

பிறகு சங்கிலிபாண்டியை காணவில்லை. அவரை தேடி மீட்டபோது நெஞ்சு வலிப்பதாக கூறினார். நாங்கள் அவரை உடனே வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தோம். ஆனால், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்'' என கூறியுள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து வால்பாறையில் உள்ள மானாம்பள்ளி வனச்சரக அலுவலகத்தில் குவிந்த வேட்டை தடுப்பு காவலர்கள் பணியின் போது உயிரிழந்த வேட்டை தடுப்பு காவலருக்கு ரூ.5 லட்சம் வழங்க வலியுறுத்தி வால்பாறை வனச்சரகர் சக்திவேலை நேற்று முற்றுகையிட்டனர். இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 

ஆனால், வனக்காவலர்கள் வனச்சரகர் மற்றும் வனவர்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டு, இறந்தவருக்கு வனத்துறை இழப்பீடு வழங்கினால் மட்டுமே நாங்கள் உடலை எடுத்துச் செல்வோம் என வனத்துறை ஊழியர்கள் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டனர். 

இதைத்தொடர்ந்து புதனன்று (இன்று) வால்பாறை, மாணாம்பள்ளி, டாப்சிலிப் சரகத்தை சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர் ஆகியோர்கள் பேச்சுவார்த்தை நடத்தி 5 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுப்பதாக ஒப்புக்கொண்டு முதல் தவணையாக ரூ.25 ஆயிரம் கொடுத்தனர். அதன் பிறகு உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின் சங்கிலிபாண்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...