பரம்பிக்குளம் வாய்க்காலில் தண்ணீர் திருட அமைக்கப்பட்ட குழாய்கள் அகற்றம்- விவசாயி கைது


திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையில் இருந்து விவசாயத்திற்காக 2-ம் மண்டல பாசனத்திற்கு கடந்த 4ம் தேதியன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நெகமம், சுல்தான்பேட்டை வழியாக காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிக்கு செல்கிறது. இதன் மூலம் ஒரு லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

 

இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள மூலனூர் பகுதியில் செல்லும் பரப்பிக்குளம் பிரதான வாய்க்கால் பகுதிகளின் ஓரங்களில் பைப் அமைத்து சிலர் தண்ணீர் திருடுவதாக பிஏபி கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வுசெய்த போது அங்கு வாய்க்கால் ஓரத்தில் கற்களுக்கு இடையே குழாய் அமைத்து திருட்டுத்தனமாக தண்ணீர் திருடப்பட்டு வருவது கண்டு பிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, உடனடியாக ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டு குழாய்களை அகற்ற முயன்றபோது கால்வாய் அருகே முறைகேடாக குழாய் பதித்து  தண்ணீர் திருடிய விவசாயி பழனிச்சாமி அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரி சதீசை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார். ஆனாலும், பொதுப்பணித் துறையினர் வாய்க்கால்  பகுதியில் முறைகேடாக பதித்த குழாய்களை முழுவதும் அகற்றினார்கள். 

இதைத்தொடர்ந்து, அதிகாரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த விவசாயி பழனிச்சாமி மீது பொதுப்பணித் துறையினர் நெகமம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, விவசாயி பழனிச்சாமியை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...