காவல்துறை மற்றும் கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் டாக்சி ஓட்டுனர்களுக்கு விபத்து முதலுதவி பயிற்சி


கோவை மாநகரில் வாகன விபத்துக்களை தடுக்கவும், விபத்தில் பலியாவோர் எண்ணிகையை தடுக்கவும் போலீசார்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.அதன்படி, இன்று பீளமேட்டில் உள்ள தனியார் விடுதியில் தனியார் கால் டாக்சி ஓட்டுனர்களுக்கு விபத்தில் சிக்கியோருக்கு முதலுதவி அளிக்கும் பயிற்சி நடைபெற்றது. 





கோவை மாநகர காவல்துறையினர் மற்றும் கே.எம்.சி.எச் மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துணை ஆணையர், சரவணன்,  வாகனம் ஓட்டும்போதும், விபத்து நடக்கும்போதும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை ஓட்டுனர்களுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து கே.எம்.சி.எச். மருத்துவமனையின் மருத்துவ குழுவினர், மனித உருவ மாதிரிகளை கொண்டு முதலுதவி மேற்கொள்ளும்  வழிமுறைகளை எடுத்துரைத்தனர். 



இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து அதிகாரி (கிழக்கு) அய்யாசாமி, உதவி கமிஷனர் மற்றும் 100க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுனர்கள் கலந்துகொண்டனர். இந்த பயிற்சி தங்களுக்கு உதவிகரமாக இருந்ததாகவும், இதன் மூலம் விபத்து ஏற்படும் போது உயிர்களை காப்பாற்றுவோம் என்றும் ஓட்டுனர்கள் தெரிவித்தனர்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...