செல்லாத நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கியதால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து ஆய்வுசெய்ய மத்திய குழு கோவை வந்துள்ளது


செல்லாத நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கியதால் ஏற்பட்டவிளைவுகள் குறித்து ஆய்வுசெய்ய, மத்திய குழு தமிழகம் வந்துள்ளது  

இக்குழு, கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அனைத்து துறை நிர்வாகிகளின் கருத்து கேட்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,



'பழைய ரூபாய் நோட்டுகள்செல்லாது' என நவ., 8 இரவு மத்திய அரசு அறிவித்தது. அதனால் ஏற்பட்ட விளைவுகள்குறித்து கள ஆய்வு செய்வதற்காக நவ., 19ல், பிரதமர் மோடி 27குழுக்களை அமைத்தார். இதில், மூன்று பேர் கொண்ட குழு நேற்று தமிழகம் வந்தது. இதில், மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை கூடுதல் செயலர், மனிதவள மேம்பாட்டுத் துறை இணைசெயலர் மற்றும் மத்திய நகர்ப்புறவளர்ச்சித்துறை துணை செயலர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.



இந்நிலையில்  மத்திய குழுவில் இடம்பெற்றுள்ள மத்திய நகர்ப்புறவளர்ச்சிச்துறை துணை செயலர் ஜானகி தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்து  வங்கிகளின் உயர்அதிகாரிகள் மற்றும் அஞ்சல் துறை உயர் அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள்,விவசாயிகள் ,சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர்.அப்போது, 100 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுகள்புழக்கம்; பழைய ரூபாய்நோட்டுகளை மாற்ற, வங்கிகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள்; ஏ.டி.எம்., மையங்களில் புதியநோட்டுகளை வினியோகிக்க செய்யப்படவேண்டி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர், வங்கிஅதிகாரிகள் மற்றும் அஞ்சல்துறையினருடன் ஆலோசனைநடத்திவிட்டு, டில்லி புறப்படுகின்றனர். 

இக்குழு, வரும் 25ம் தேதி கள ஆய்வுஅறிக்கையை  மத்திய அரசிடம் ஒப்படைக்க  உள்ளதாக தெரிய வருகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...