சொத்து வரி செலுத்தாததால் குடிநீர் இணைப்புகளை துண்டித்து மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் 3 மண்டலங்களில் உள்ள வரிதாரர்கள் சொத்து வரி செலுத்தாததால் 4 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு 57-ல் மசக்காளிபாளையம், ஜி.வி.ரெசிடென்ஸியில் வசிக்கும் வரிதாரர்கள் சுபாஷ் சந்திர திவாரி மற்றும் திருவா சந்திர திவாரி ஆகியோர் சொத்து வரி ரூ.11 ஆயிரத்து 922 ரூபாய் மற்றும் 4 ஆயிரத்து 664 ரூபாய் செலுத்தாததால் வரிதாரரின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

இதேப்போல், தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு 97-ல் குறிச்சி, அன்னை இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் சுமிதா என்பவர் சொத்து வரி ரூ.16 ஆயிரத்து 108 மற்றும் ரூ.19 ஆயிரத்து 308 செலுத்தாததால் வரிதாரரின் குடிநீர் இணைப்பும், வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு 44-ல் சபரி கார்டன் பகுதியில் வசிக்கும் வி.சீதாலட்சமி என்பவர் சொத்து வரி ரூ.6 ஆயிரத்து 696 மற்றும் வார்டு 39-ல் ஆவாரம்பாளையம் பகுதியில் வசிக்கும் சாந்தா என்பவர் சொத்து வரி ரூ.76 ஆயிரத்து 360 செலுத்தாததால்  2 குடிநீர் இணைப்புகள் என ஆகமொத்தம் 4 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...