பாகிஸ்தான் கடற்படையினர் நடவடிக்கை இந்திய மீனவர்கள் 43 பேர் கைது

பாகிஸ்தான் கடற்பகுதியில் மீன்பிடித்ததாக கூறி 43 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்தனர்.  இந்தியாவை சேர்ந்த மீனவர்களை பாகிஸ்தானும், பாகிஸ்தானை சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையிலும் அத்துமீறியதாக கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகின்றது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தை ஒட்டிய அரபிக்கடற்பகுதியில் நேற்று இந்திய மீனவர்கள் சிலர் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து சென்ற பாகிஸ்தான் கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களின் படகுகளை சிறைப்பிடித்தனர்.

அதில் இருந்த 43 மீனவர்களை கைது செய்து கராச்சிக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து அவர்கள் மீது மீனவர்கள் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் துறைமுகம் பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தெரிகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...