கோவை இரயில் நிலையம் பகுதியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி மற்றும் தன்னார்வலர்கள்


தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பர் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சுத்தம் செய்யும் பணி நடைபெற உள்ளது. இதற்காக, கோவை மாநகராட்சியின் சார்பில் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தூய்மைப் பணியில் ஈடுபட அழைப்பு விடப்பட்டது.



அதன்படி, இன்று கோவை மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட இரயில் நிலையம் அருகில் கோவை மாநகாட்சியும், தூய்மை பாரத இயக்கமும் இணைந்து காலை 7 மணி முதல் 9 மணி வரை தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.



ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா-வின் முன்பு 50-க்கும் மேற்பட்டோர் இணைந்து பேருந்து நிலையம், கடைகள், ஆட்டோ நிறுத்தம் ஆகிய பகுதிகளில் இருந்த குப்பைகளை அகற்றினர்.



இதையடுத்து, அப்பகுதியில் இருந்த சுவரொட்டிகள், விளம்பர பலகைகள் உள்ளிட்டவற்றை அகற்றி, அப்பகுதி கடைக்காரர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோரிடம் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



இப்பணிகளை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 



உடன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...