'மல்லையாவுக்கு மட்டுமா; எனக்கு தள்ளுபடி இல்லையா!'

மும்பை: 'விஜய் மல்லையா உள்ளிட்டோரின் கடனை தள்ளுபடி செய்தது போல, நான் வாங்கிய, 1.5 லட்சம் ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, துப்புரவு தொழிலாளி ஒருவர், எஸ்.பி.ஐ., எனப்படும் ஸ்டேட் வங்கிக்கு கடிதம் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மல்லையாவுக்கு தள்ளுபடி:

தொழில் அதிபர் விஜய் மல்லையாவின், 'கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனம் வாங்கிய, 1,200 கோடி ரூபாய் உட்பட, 62 பெரும் பணக்காரர்கள் வாங்கிய, 7,016 கோடி ரூபாய் கடனை, எஸ்.பி.ஐ., தள்ளுபடி செய்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டம் திரியம்பகேஷ்வர் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளியான, பாபுராவ் சோனாவானே, உள்ளூர், எஸ்.பி.ஐ., கிளைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

எனக்கும் தள்ளுபடி செய்யுங்கள்:

அதில், கூறியுள்ளதாவது: விஜய் மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்துள்ளீர்கள்; சிறந்த முடிவு; அது போலவே என் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். என் மகனின் சிகிச்சைக்காக, தங்கள் வங்கியில், 1.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன்; அதை திருப்பிச் செலுத்த முடியவில்லை. எனவே, நான் வங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார். ஆனால், இந்த கடிதத்திற்கு, சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் பதில் ஏதும் அளிக்கவில்லை.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...