மாநகராட்சி அலுவலகத்தில் சுவச் சர்வேக்ஷன் 2017 கருத்தரங்கு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி கூட்டரங்கில் இன்று காலை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் சார்பில் சுவத் சர்வேக்ஷன் 2017  கருத்தரங்கு நிகழ்ச்சி கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது. 



ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நடைபெறும் சுவச் சர்வேக்ஷன் கீழ் 500 நகரங்கள் மற்றும் அந்தந்த நகர்ப்புறம், சுகாதார நிலைகள் அடிப்படையில் மதிப்பீட்டு தரவரிசை வழங்கப்படும். இதில் மாநகராட்சி நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தூய்மை செய்வதற்காக அப்பகுதிகளுக்கு செய்யப்பட்ட பணிகள் மூலம் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அப்பகுதிகளை தரவரிசை மதிப்பீடு வழங்கப்படும். 



மேலும், இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்கள், பாரம்பரியம் மற்றும் சுற்றுலா நகரங்கள், குறைவான ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் இருந்து ஜனவரி 2017 இல் நடத்தப்படும் இந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதற்கான ஆய்வில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களான நம்ம கோவை அணி, கோ கோயமுத்தூர் அணி, சுவட்ச் பாரத் தூதுவர்கள் போன்ற பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இதில் இவர்களுக்கு நகரின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள சுகாதார நிலைகளில், சுத்தமாக வைக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், திறந்தவெளி கழிப்பறைகள் பற்றிய பிரச்சாரம் போன்றவற்றை கூட்டத்தில் பேசப்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...