இந்திய தொழில் வர்த்தக சபை கோவை சார்பில் 'ஒன்றிணைவோம்' கருத்தரங்கு

கோவை: அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் கோவை இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் 'ஒன்றிணைவோம்' என்ற கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழகத்தில் உள்ள தொழில் வர்த்தக சங்கங்களின் அனைத்து தலைவர்களையும், பொறுப்பாளர்களையும் இணைக்கவும் நம் மாநிலத்திற்கு முன்னேற்றத்தையும் வளத்தையும் கொண்டுவருவதற்குமான ஒரு முன்முயற்சியே இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கம்.



இந்நிகழ்ச்சியில், சுமார் 18 தொழில் வர்த்தக சங்கங்கள் கலந்து கொண்டது. வணிக அமைப்புகள் நம் மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல என்னென்ன செய்யவேண்டும் என்பது தொடர்பான கருத்துக்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டது. மேலும் தமிழக பொருளாதாரத்தில் சில முக்கிய பிரச்சனைகளாக பல வகைகளில் பாதிப்பவை.




1. வரும் 1 ஏப்ரல் 2017ம் தேதி முதல் அமலாக்கவிருக்கும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை.
2. ரொக்க பணமில்லாத பொருளாதாரத்தை உருவாக்கும் பொருட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை.
3. தொழிலாளர் நிர்வாகம் போன்றவை, எப்படி தீர்ப்பது என முடிவு செய்வதே இதன் முக்கிய நோக்கம். 

'ஒன்றிணைவோம்' என்பது தமிழக முன்னேற்றத்திற்கு அவசியமான தளங்களில் தொழில் வர்த்தக அமைப்புகள் அரசாங்கத்துடன் இணைந்து  செயல்படுவதற்கான ஓர் அமைப்பு. இதில், உங்களது முயற்சியில் பங்கெடுத்து மதிப்பு மிகுந்த கருத்துக்களை முன்வைத்து பொது விவாதங்களை உருவாக்கி உரிய விளைவுகள் ஏற்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்பதற்கே கோவை, இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் இக்கருத்தரங்கு நடைபெற்றது. 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...