நான்கு தொகுதிகளில் ஓட்டுப்பதிவு துவங்கியது


சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று (நவ.,19) காலை 7 மணிக்கு துவங்கியது.

தமிழகத்தில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம்; புதுச்சேரியில், நெல்லித்தோப்பு சட்ட சபை தொகுதிகளுக்கு, இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை, 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, மாலை, 5:00 மணி வரை நடைபெறுகிறது. மாலை, 5:00 மணிக்கு மேல், வாக்காளர்கள் நின்றால், அவர்களுக்கு டோக்கன் வழங்கி, ஓட்டளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். வாக்காளர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படுகிறது. ஓட்டுப்பதிவுக்கு பின் 22ம் தேதி ஓட்டு எண்ணப்பட்டு முடிவு வெளியிடப்படும்.

உடனுக்குடன் அறியலாம்:
ஓட்டுப்பதிவு சதவீதத்தை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அறிய, புது வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் இருந்து, ஓட்டுச்சாவடி அலுவலர்களை, மொபைல் போனில் அழைத்தால், அவர்கள் ஓட்டுப்பதிவு சதவீதத்தை, மொபைல் போனிலேயே பதிவு செய்து அனுப்புவர். அதற்கான, புதிய சாப்ட்வேர், இந்தத் தேர்தலில், அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. எனவே, ஓட்டுப்பதிவு சதவீதத்தை உடனுக்குடன் அறியலாம். அவை, தேர்தல் கமிஷன் இணையதளத்திலும் வெளியிடப்படும்.

பலத்த பாதுகாப்பு:

தேர்தல் அமைதியாக நடைபெற, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், துணை ராணுவ வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...