வ.உ.சிதம்பரனாரின் 80வது நினைவு நாள் அனுசரிப்பு


கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்று தமிழக மக்களால் இன்றும் நினைவில் இருப்பவர் வ.உ.சி எனும் வ.உ.சிதம்பரனார்.

இவரது 80-வது நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மத்திய சிறையில் அமைந்துள்ள வ.உ.சி. நினைவு மண்டபத்தில் வெள்ளியன்று (இன்று) அவரது உருவச் சிலை மற்றும் செக்கிற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செய்யப்பட்டது.



இந்நிகழ்ச்சிக்கு அகில இந்திய வ.உ.சி மக்கள் நல இயக்கத்தின் தலைவர் பா.சு.ஆத்மா சிவகுமார் தலைமை தாங்கினார். கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் முருகேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

பா.சு.செந்தில் குமார் மற்றும் செய்யது இஷாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலாளர் ஹரிஹரன், சிறைத் துறை நல அலுவலர் சத்யமூர்த்தி, வழக்கறிஞர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டர்.

மேலும், சிறைத் துறையின் சார்பில் வ.உ.சி-யின் சிலை மற்றும் செக்கு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பொதுமக்கள் அதனை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...