ரூபாய் தாள்களுக்கு கடும் தட்டுப்பாடு: பூடான் நோட்டுக்களை பயன்படுத்தும் அசாம் எல்லையோர கிராம மக்கள்

ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அதிரடி அறிவிப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.‘செல்லாது’ என அறிவிக்கப்பட்டுள்ள ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை மாற்றவும், கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் மணிக்கணக்கில் காத்து கிடக்கிற நிலை, நீடிக்கிறது. அப்படி எடுக்கிற பணத்தையும் பொதுமக்களில் ஒரு தரப்பினர் புழக்கத்தில் விடாமல் பாதுகாக்கும் நிலையும் உள்ளதால், பண தட்டுப்பாடு முடிவுக்கு வராமல் தொடர் கதையாக நீளுகிறது.

நாடு முழுவதும் எந்த பாரபட்சமும் இன்றி மக்கள் திண்டாடி வரும் நிலையில், அசாம் மாநிலத்தின் எல்லையோர கிராம மக்கள் மாற்று வழியை கையாள  ஆரம்பித்துள்ளனர். அசாம் எல்லைப்பகுதியில் உள்ள பூடான் நாட்டு பணத்தை கொடுத்து பொருட்களை வாங்க ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக பூடான் ரூபாய் மதிப்பின் தொகை 25 சதவீதம் அந்த பகுதிகளில் அதிகரித்துள்ளது.  எல்லையில் உள்ள டாட்குரி பகுதியில் பூடான் ரூபாய் தாள்களை அங்குள்ள சில்லறை விற்பனை கடைகளில் மக்கள் எளிதாக பெற்றுச்செல்கின்றனர்.

டாட்குரி கிராமத்தில் கடை வைத்துள்ள ஒருவர் கூறுகையில், இங்குள்ள கிராமங்களில் வங்கிகளோ, ஏடி.எம் மையங்களோ கிடையாது. ஏ.டி.எம் மையங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் 50 கி.மீட்டர் செல்ல வேண்டும். சவாலான சாலைகளில் அங்கு செல்வது கடினமான பணி ஆகும். எஸ்.பி.ஐ யின் நடமாடும் ஏ.டி.எம்  வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வருகிறது. எனவே இங்குள்ள மக்கள் பூடான் கரன்சியை பயன்படுத்தி வருகின்றனர்” என்றார்.  பணம் வழங்குவதற்கு உரிய  நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...