பிளாஸ்டிக் இல்லா நகரமாக மாற்ற கோவை மாநகராட்சி நடவடிக்கை!


கோயமுத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற கூட்டரங்கில் கடை உரிமையாளர்கள் பாலித்தீன் பைகளை தவிர்த்து துணிகளால் ஆனா பைகள் உபயோகிப்பதாக  உறுதியளித்தனர். உறுதியளித்த முதல் 100 கடைகளின் பெயர்களை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டு, கடை உரிமையாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.



பின்னர், பேசிய அவர்:-

கோவையில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் மற்றும் பாலத்தீன் பைகள் பெருகி வருவதால், சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு வருகிறது.  இதை தடுத்திடும் வகையில் சுகாதார அலுவலர்கள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து கோவையிலுள்ள கடை உரிமையாளர்கள் தானாகவே முன்வந்து பாலித்தீன் பைகளை தவிர்த்து துணிகளால் ஆன பைகள் உபையோகிப்பதாக உறுதியளித்தனர். இதுபோன்ற கடைகளுக்கு உரிய அங்கீகாரமும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.

மேலும், பாலத்தீன் பைகள் உயிர்களுக்கும், பூமிக்கும் பெரும் கேடுகளை உருவாக்குகிறது. குறிப்பாக பாலித்தீன் பைகள் மக்குவதில்லை. இதனால் மழைநீர்  மண்ணுக்கு செல்லாமல், நிலத்தடி நீரும் பாதிக்கிறது. இதுபோன்ற கேடுகளை தவிர்க்க பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும் போது துணிகளால் ஆனா, பைகளை எடுத்து செல்லவும், இதன்மூலம் கோவை நகரம் பிளாஸ்டிக் இல்லா நகரமாக மாற்ற முடியும் என கூறினார்.

இதில், கோவை மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் எம்.சந்தோஷ்குமார் மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...