கோவை மாநகராட்சியின் மூலம் இப்பகுதிகளுக்கு தீர்வு கிடைக்குமா?

வீணாய் போகும் குடிநீர்!

கோவை, ஹோப்ஸ் பகுதியையும், சிங்காநல்லுர் பகுதியையும் இணைக்கும் சாலையான காமராஜர் சாலையில் குடிநீர் குழாய் உடைந்த சாலையோரங்களில் வீணாக குடிநீர் செல்கிறது. அப்பகுதியில் நடந்து செல்லும் பொது மக்கள் சாலையோரமாக செல்வதற்கு இடையூறாக உள்ளதாக கூறுகின்றனர். இதனை சரிசெய்ய கோவை மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.



சாலை ஓரங்களில் வெட்டப்பட்ட மரம் அகற்றப்படவில்லை!

59வது வார்டுக்கு உட்பட்ட காமராஜர் சாலையில் கடந்த தீபாவளி முன்பு பெய்த கன மழையால் அப்பகுதியில் சாலைஓரம் இருந்த மரம் வேரோடு சாய்ந்தது. பின்னர், சாலையில் போக்குவரத்து நெரிசலை  தவிர்ப்பதற்கு  உடனடியாக மரத்தை அகற்றுவதற்காக மாநகராட்சி பணிகளை மேற்கொண்டது. வெட்டப்பட்ட மரத்தை அப்பகுதியில் சாலையோரங்களில் போடப்பட்டுள்ளது. இன்னும் அதனை அகற்றப்படாமல் உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.



கரடு முரடான சாலை!

சிங்காநல்லூர், 63வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான தேவேந்தர் வீதியில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். 



அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி!

சிங்காநல்லூர், 63வது வார்டுக்கு உட்பட்ட தேவேந்தர் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஒன்று உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தொட்டி மூலம் உப்புத்தண்ணீரை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பராமரிக்கப்படாமல்  உள்ளதால் இடிந்து விழும் அபாய நிலையில் இருக்கிறது. இதனை சரிசெய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...