நவாஸ் ஷெரீப் முன்னிலையில் இந்திய எல்லை அருகே பாகிஸ்தான் போர் பயிற்சி

இந்திய எல்லை அருகே பாகிஸ்தான் பிரதமர்  நவாஸ் ஷெரீப் முன்னிலையில் அந்நாட்டு ராணுவத்தினர் திடீர் போர் பயிற்சியில் ஈடுபட்டனர். ஜம்மு-காஷ்மீர், உரி தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான், இந்திய எல்லைப்பகுதிகள் மீது தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியாவும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றது. இதனால் இரு நாடுகளுக்கிடையில் மீண்டும் போர் பதற்றம் நீடித்து வருகின்றது.

இந்த நிலையில்  பாகிஸ்தான் வீரரகள், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் பகவல்பூர் அருகே, தங்கள் நாட்டு பகுதியான காயிர்பூர் மற்றும் டேம்வாலி பகுதியில் திடீர் போர் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சி முகாமிற்கு ராத் உல் பார்க் என பெயரிடப்பட்டுள்ளது. இப்போர் பயிற்சியில் நவீன பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் போன்ற அனைத்தும் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இந்த போர் பயிற்சியானது பாகிஸ்தான் நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ரஸீல் ஷெரீப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த பயிற்சியை பார்வையிட்டு நவாஸ் ஷெரீப் பேசுகையில், ‘‘பாகிஸ்தான் எந்த ஒரு சூழ்நிலை வந்தாலும்  எதிரிகளை சமாளிக்கக்கூடிய வகையில் உள்ளது என்பதை பிரதிபலிக்கும் விதமாக இந்த போர் பயிற்சியானது நடந்து முடிந்துள்ளது. அதனால் பாதுகாப்பு குறித்து  நாம் கவலைப்பட தேவையில்லை. பாகிஸ்தான் எந்த ஒரு நிலையிலும்  வலியப்போய் போர் தொடுக்காது’’ என்றார். பாகிஸ்தானின் இந்த திடீர் பயிற்சியால், எல்லையில் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...