ரயில் பயணச் சீட்டு பரிசோதகரை தொடர்பு கொள்ள உதவி எண் அறிவிப்பு

ரயிலில் பயணச் சீட்டு பரிசோதகரை பல நேரங்களில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று பயணிகள் தரப்பில் இருந்து தெற்கு ரயில்வேக்கு புகார் வந்தது. இதனையடுத்து பயணச் சீட்டு பரிசோதகரை தொடர்பு கொள்ள பயணிகளுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ரயிலில் உயர் வகுப்புகள் அதாவது ஏசி முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்பவர்கள் பயணச் சீட்டு பரிசோதகர்களை ரயில் புறப்படும் 1 மணி நேரத்துக்கு முன்பாகவே நடைமேடையிலேயே தொடர்பு கொள்ளலாம்.

படுக்கை வசதிக்கு முன்பதிவு செய்திருக்கும் பயணிகள், ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடம் முன்பாகவே பயணச் சீட்டு பரிசோதகரை தொடர்பு கொள்ளலாம்.


இதைத் தொடர்ந்து, உயர் வகுப்பு ரயில் பெட்டி பயணிகள் ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடம் முன்பாகவும், படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் 15 நிமிடம் முன்பாகவும் பயணச் சீட்டு பரிசோதகரை ரயிலிலேயே இனி எளிதில் அனுகலாம்.

அப்படியும் பயணச் சீட்டு பரிசோதகரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் உதவி எண்ணை அழைக்கலாம்:


தெற்கு ரயில்வே வர்த்தக பிரிவு : 044-25350308
ஹெல்ப் லைன் : 138
சென்னை கோட்டம் : 044-25354457, 9003061977
திருவனந்தபுரம் : 0471-2326484, 9567869375
சேலம் : 0427-2431010, 9600956230
பாலக்காடு : 0491-2552755, 9746763956
மதுரை : 0452-2308250, 9003862961
திருச்சி : 0431-2418992, 9003864966
தலைமை அலுவலகம், வர்த்தகப் பிரிவு
சிறப்பு அதிகாரி : 044-25354405

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...