தேர்தல் தோல்விக்கு பின் வீட்டை விட்டு வெளியே வரவே விரும்பவில்லை -ஹிலாரி கிளிண்டன் வருத்தம்

அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை பெற்றாலும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க தேர்தல் அவை வாக்குகளில் பெரும்பான்மை பெறும் போட்டியில் தோல்வியடைந்தார்.

வாஷிங்டன் டிசியில் நடைபெற்ற ஒரு குழந்தைகள் தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் உரையாற்றிய ஹிலாரி கிளிண்டன் கூறியதாவது:-

அண்மைய அதிபர் தேர்தல் அமெரிக்கர்களை அவர்களின் ஆத்ம தேடலுக்கு தூண்டி உள்ளது. எனது வீட்டை விட்டு வெளியே செல்வதையே நான்  விரும்பவில்லை. இன்றிரவு இந்த விழாவுக்கு வருவது எனக்கு எளிதாக இருக்கவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும்.

'தேர்தல் முடிவுகளால் உங்களில் பலர் ஏமாற்றம் அடைந்திருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்களை போலவே, நானும் இதுவரை வெளிப்படுத்த முடியாத அளவுக்கு ஏமாற்றம் அடைந்துள்ளேன்'

இது எளிதில்லை என்பது எனக்கு தெரியும். கடந்த வாரத்தில் பலரும் நாம் நினைத்த அமெரிக்கா தானா இது என்று தங்களை தாங்களே கேட்டுக் கொள்கின்றனர் என்பது எனக்கு தெரியும்'' என்று தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...