மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரம் வழங்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் செவித்திறன் மற்றும பேசும் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தையல் தொழில் மேற்கொள்ள அரசின் மூலம் விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது.

இந்த தையல் இயந்திரத்தைப் பெற விண்ணப்பிப்போர் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெரும் தையல் பயிற்சி படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 

இத்தகைய தகுதிகள் உடைய மாற்றுத் திறனாளிகள் மேற்குறிப்பிட்ட சான்றிதழ்களின் நகலுடன் வரும் நவம்பர் 30ம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோவை என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...