தனியார் மருத்துவமனையில் 3 வயது குழந்தை உயிரிழந்ததால் பெற்றோர் மருத்துவமனை கண்ணாடியை உடைத்தனர்

கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 வயது குழந்தைக்கு சரியான சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்துவிட்டதாகக் கூறி குழந்தையின் பெற்றோர் மருத்துவமனை கண்ணாடிக் கதவை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, பெரியகுயிலி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். அவர் தனது மூன்றரை வயது பெண் குழந்தையான தீபஸ்ரீ-க்கு உடல் நிலை குறைவு காரணமாக சிங்காநல்லூர் பகுதியில் உள்ள சைல்ட் டிரஸ்ட் எனும் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

செவ்வாயன்று குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தைக்கு நிமோனியா நோய் பாதிப்பு இருப்பதாகக் கூறி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த சூழலில் புதனன்று (இன்று) பிற்பகல் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

இதனையடுத்து மருத்துவர்களின் அலட்சியப் போக்கு காரணமாகவே குழந்தை உயிரிழந்ததாகக் கூறி பெற்றோர் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆத்திரமடைந்த குழந்தையின் தந்தை சிவகுமார் திடீரென மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு கதவு கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த சிங்காநல்லூர் காவல் நிலைய போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே மருத்துவமனை நிர்வாகம் குழந்தையை அனுமதித்தது  முதல் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும், ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது எனக் கூறி அலைகழித்ததாகவும் குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...