தனியார் மருத்துவமனையில் 3 வயது குழந்தை உயிரிழந்ததால் பெற்றோர் மருத்துவமனை கண்ணாடியை உடைத்தனர்

கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 வயது குழந்தைக்கு சரியான சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்துவிட்டதாகக் கூறி குழந்தையின் பெற்றோர் மருத்துவமனை கண்ணாடிக் கதவை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, பெரியகுயிலி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். அவர் தனது மூன்றரை வயது பெண் குழந்தையான தீபஸ்ரீ-க்கு உடல் நிலை குறைவு காரணமாக சிங்காநல்லூர் பகுதியில் உள்ள சைல்ட் டிரஸ்ட் எனும் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

செவ்வாயன்று குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தைக்கு நிமோனியா நோய் பாதிப்பு இருப்பதாகக் கூறி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த சூழலில் புதனன்று (இன்று) பிற்பகல் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

இதனையடுத்து மருத்துவர்களின் அலட்சியப் போக்கு காரணமாகவே குழந்தை உயிரிழந்ததாகக் கூறி பெற்றோர் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆத்திரமடைந்த குழந்தையின் தந்தை சிவகுமார் திடீரென மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு கதவு கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த சிங்காநல்லூர் காவல் நிலைய போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே மருத்துவமனை நிர்வாகம் குழந்தையை அனுமதித்தது  முதல் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும், ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது எனக் கூறி அலைகழித்ததாகவும் குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...