'எக்சிட் தேர்வு' வேண்டாம் என்று கூறி அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


மருத்துவ படிப்பு முடித்த மாணவர்களுக்கு எக்சிட் தேர்வு வைக்க இருப்பதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தேர்வு முறையை எதிர்த்து கோவை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இது குறித்து அக்கல்லூரியின் மாணவர் பிரதிநிதியான விட்மன் அறிவுமதி கூறியதாவது :- 

மத்திய மற்றும் மாநில அரசுகளின் அங்கீகரிக்கப்பட்ட தேர்வுகளை எழுதியே நாங்கள் இந்த படிப்பை படித்து வருகிறோம். ஆனால் தற்போது எக்சிட் தேர்வு முறை வைக்க இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்த முறை அமலுக்கு வந்தால் இந்தியாவில் மருத்துவர்கள் எண்ணிக்கை குறையும். வெளிநாடுகளிலும், தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களிடையேயும் நடத்தப்பட வேண்டிய இந்த தேர்வை, அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களிடையே நடத்துவது ஏற்புடையதல்ல. உடனடியாக இதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் கலந்து கொண்டனர். 



          

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...