பள்ளி மாணவருக்கு பிரம்படி கொடுத்த ஆசிரியர் - அரசு மருத்துவமனையில் மாணவனுக்கு சிகிச்சை


கோவை ஆர்.எஸ்.புரத்தை அடுத்த காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு தரணிதரன் (13) என்ற மகன் உள்ளார். இவர், பூமார்க்கெட் பகுதியில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் 7 ம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில், திங்களன்று தரணிதரன் பள்ளியில் விளையாடிய போது அவரது கணித ஆசிரியர் சிவராஜ் பிரம்பால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு வந்த தரணிதரன் இது குறித்து பெற்றோரிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல், அழுதபடி உறங்கினார். இதைத்தொடர்ந்து, செவ்வாயன்று (இன்று) காலையும் அதேபோல் சிவராஜ் தரணிதரனை பிரம்பால் அடிக்கவே அவர் தனது பெற்றோரிடம் புகார் அளித்தார். 



இதைத்தொடர்ந்து பள்ளிக்கு வந்த பெற்றோர் தரணிதரனை அழைத்துக்கொண்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்தனர். இதுகுறித்து மாணவரின் தந்தை கூறுகையில், என் மகனை கணித ஆசிரியர் சிவராஜ் தாக்கியதாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளி நிர்வாகத்தின் மீதும், எனது மகனை தாக்கி ஆசிரியர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் கொடுக்க விருப்பம் இல்லை என்று கூறிய பெற்றோர், அம்மாணவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.



Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...