டிரம்பிடம் சீன அதிபர் வலியுறுத்தல் வலிமையான நல்லுறவுக்கு ஒத்துழைப்பு அவசியம்

 நாடுகளிடையேயான நல்லுறவுக்கு சீனா - அமெரிக்கா இடையே ஒத்துழைப்பு அவசியம் என புதிய அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள  டொனால்ட் டிரம்பிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார். அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இதையடுத்து புதிய அதிபர் டொனால்ட் டிரம்புக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக சீன தொலைக்காட்சி  செய்தி வெளியிட்டுள்ளது.

அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை சீனா பறித்து கொள்வதாக டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். இந்த  நிலையில் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசிய ஜின்பிங், அமெரிக்க அதிபராக தேர்வு பெற்ற டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தார்.  அப்போது ஜின்பிங் பேசியதாவது: கடந்த 37 வருடமாக சீனா, அமெரிக்கா இடையே உள்ள ராஜ்ய உறவுமூலம் இரு நாட்டு மக்களும்  ஏராளமான நன்மைகளை பெற்றுள்ளனர். உலகத்தில் சீன வளர்ந்து வரும் நாடாகவும், அமெரிக்கா வல்லரசாகவும் உள்ளது.

எனவே வலிமையான பொருளாதாரத்தை பெற்றுள்ள இருநாடுகளும் உலக அமைதிக்காக இணைந்து பணியாற்றுவது அவசியம். வலிமையான  இரு நாடுகளின்  ஒத்துழைப்பே வலிமையான நல்லுறவுக்கு வழிகாட்டியாக உள்ளது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே சீனா  தொடர்ந்து அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறது. இவ்வாறு ஜின்பிங் தெரிவித்தார். அப்போது பேசிய டிரம்ப், ‘‘அமெரிக்கா சீனா  இடையேயான உறவு மற்றும் இருநாடுகளுக்கும் கிடைத்த பலன்களை ஒப்புக்கொள்கிறேன். இருநாடுகள் இடையே  வலிமையான உறவு  நீடிக்க விரும்புகிறேன்’’ என்றார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...