உலக சக்கரை நோய் விழிப்புணர்வு பேரணி

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி இன்று உலக சக்கரை நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு சக்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோயமுத்தூர் அரசு மருத்துவமனையில் உலக சக்கரை நோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



இப்பேரணியை கோவை மாவட்ட வருவாய்துறைத் தலைவர் கிருஸ்துராஜ் துவக்கி வைத்தார். அரசு மருத்துவமனை டீன் எட்வின் ஜோ முன்னிலை வகித்தார். இதில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் அதிவிரைவுப் படையினர் கலந்து கொண்டனர். இப்பேரணி அரசு மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று நிறைவு பெற்றது.



இது குறித்து நீரிழிவு துறைத் தலைவர் மருத்துவர் ஜெயப்ரகாஷ் கூறுகையில்:-

பொது மக்களுக்கு சக்கரை நோய் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைவரும் சக்கரை நோயை சரிசெய்ய செயற்கை இன்சூலின் மாத்திரை, இன்சூலினை ஊசி வடிவில் எடுத்து கொள்கிறார்கள். தினமும் 400க்கும் மேற்பட்ட சக்கரை நோயாளிகளுக்கு இலவசமாக சிகிக்சை அளிக்கப்படுகிறது.

மேலும் இலவச இன்சூலின் வழங்கப்படுகிறது. நோயாளியின் உடல் அமைப்புக்கு  ஏற்றவாறு இன்சூலின் உற்பத்தியை தூண்டும் உடற்பயிற்சி முறைகள் உள்ளன. இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை எப்போதும் கட்டுபாட்டில் வைக்க முடியும். தினமும் இரண்டு வேளை குறைந்தபட்சம் 30 நிமிட வேக நடைபயிற்சி, ஒருமணி நேர விளையாட்டு, நடந்து செல்வது போன்றவற்றை செய்வதன் மூலம் உடலில் சக்கரை நோய் வராமல் தடுக்கலாம் எனக் கூறினார்.



Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...