வங்கி வாசலில் கார் புகுந்து விபத்து.வரிசையில் நின்ற பத்துக்கும் மேற்பட்டோர் காயம்.


ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வரிசையில் நின்றிருந்த பொதுமக்கள் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட பத்துப்பேர் காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை சின்னியம் பாளையம் அருகே இந்தியன் வங்கி கிளை செயல்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக ஆயிரக்கணக்கான மக்கள் பணம் எடுக்கவும், மாற்றவும் வங்கிகளில் குவிந்து வருகின்றனர். 

இதன் ஒருபகுதியாக கோவை சின்னியம்பாளையம் பகுதியில்  உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் முன்பாக ஏராளமானோர் பணம் எடுக்க வரிசையில் நின்றிருந்தனர். இந்நிலையில் கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற கார் ஓன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த இருசக்கர வாகனம் மற்றும் நின்று கொண்டிருந்த கார் மீதும்  வரிசையில் நின்று கொண்டு இருந்த பொதுமக்கள் மீதும் கார் மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் அங்கிருந்த பொது மக்கள் பலர் காயம் அடைந்தனர். இதில் நின்று கொண்டு இருந்த காரில் அமர்ந்திருந்த ஸ்ரீஜா என்ற பெண்ணும் அவருடன் இருந்த யாசிகா, அஸ்விகா ஆகிய  இரு குழந்தைகளும் காயம் அடைந்தனர். மேலும் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வரிசையில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் பத்துக்கும் மேற்பட்டோர்  காயம் அடைந்தனர். 

வங்கி வாசலில் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது கார் மோதிய சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுதது காயமடைந்தவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், அஸ்விகா என்கிற குழந்தைக்கு தலையில் அடிபட்டுள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய கல்லூரி மாணவர் சஞ்சயை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  வங்கி வாசலில் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது கார்மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...