அமெரிக்க குடியுரிமையை சீரமைக்க 10 அம்ச திட்டம் அறிமுகம்: டிரம்ப் முதல் அறிவிப்பால் இந்திய நிறுவனங்கள் அதிர்ச்சி

வாஷிங்டன்:அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்கிறார். அதற்கு முன் தனது நிர்வாக திட்டத்தை தயாரித்து வருகிறார். அமைச்சர்கள் நியமனம் தொடர்பாகவும் அவர் ஆலோசித்து வருகிறார். முதல்கட்டமாக தேர்தலில் அளித்த வாக்குறுதிபடி அமெரிக்க குடியுரிமை திட்டத்தை சீரமைப்பது தொடர்பாக டிரம்ப் அமைத்த நிர்வாக குழுவினர் 10 அம்ச திட்டங்களை அறிவித்துள்ளனர். அதன்படி சில நாடுகளுக்கு விசா உரிமையை ரத்து செய்வது, குடியுரிமை சட்டத்தை முறைப்படுத்துவது உள்ளிட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன என்று அந்த குழுவினர் அறிவித்து உள்ளனர். அணுஆயுதம், சைபர் தாக்குதல் மற்றும் நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் கூடுதல் அக்கறை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரசாரத்தின் போது  எச்-1 பி விசா திட்டம் மாற்றி அமைக்கப்படும் என டிரம்ப் கூறினார். அதன்படி இந்திய மதிப்பில்  மாதம் ரூ. 67 லட்சம் சம்பளம் வாங்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த விசா  வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இதுவும் 10 அம்ச திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டால் இந்திய நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று  அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...