கோவையில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் 25-வது கருத்தரங்கம்

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் எட்டாவது பிராந்தியத்தின் 25வது மண்டல கருத்தரங்கம் வெள்ளி (இன்று) மற்றும் சனிக்கிழமையன்று கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தால் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் உள்ள 8 வேளாண் தட்பவெப்ப மண்டலங்களின் அடிப்படையில் எட்டு பிராந்தியக் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்தந்த மண்டலங்களின் வேளாண் ஆராய்ச்சி, கல்வி மற்றும் விரிவாக்கம் சார்ந்த திட்டங்கள் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமறை விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படுகின்றன. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் எட்டாவது மண்டலத்தின் 24வது பிராந்திய கருத்தரங்கம் கடந்த 2014ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில், வேளாண்மை பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் கடந்த இரண்டு அண்டுகளாக மேற்கொண்ட பணிகள் குறித்து விவாதிப்பதோடு மட்டுமல்லாமல் அடுத்து வரக்கூடிய இரண்டு ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.



இன்று தொடங்கிய இந்த நிகழ்வில் எட்டாவது மண்டலத்தில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு அகிய மாநிலங்களில் அமைந்துள்ள வேளாண்மைப் பல்கலைக் கழகங்கள், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்திற்குட்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் மற்றும் வனவியல் துறைகளைச் சேர்ந்த துணை வேந்தர்கள், ஆராய்ச்சி இயக்குநர்கள், விரிவாக்கத்துறை இயக்குநர்கள், முதல்வர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என பலர் பங்கேற்றனர்.



புதுவை மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் இக்கருத்தரங்கை துவங்கி வைத்தார். மத்திய அரசின் வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் செயலாளரும், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் ஜெனரலுமான முனைவர் திரிலோச்சன் மொகபத்ரா தலைமை உரை ஆற்றினார். இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பலர் இதில் பங்கேற்றனர்.



Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...