பழைய 500, 1000 ரூபாயில் மாநகராட்சி வரி- குவியும் பொதுமக்கள்


500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கி, தபால் நிலையம் உள்ளிட்டவற்றில் மாற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், கோவையில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை மக்கள் பழைய 500 மற்றும் 1000 ரூபாயைக் கொண்டு நவம்பர் 11ம் தேதியன்று (இன்று) ஒரு நாள் வரி செலுத்தலாம் என கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் அறிவித்திருந்தார். 



அதனடிப்படையில், இன்று (வெள்ளி) ஏராளமான பொதுமக்கள் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் வரி செலுத்த குவிந்தனர். 

இதுகுறித்து, வரி செலுத்த வந்த பொதுமக்கள் கூறுகையில், 

மாநகராட்சி அலுவலகத்தில் வழக்கத்தை விட இன்று மக்கள் கூட்டமாக வந்து வரிசையாக வரி செலுத்த காத்திருக்கின்றனர். மின்சார வரி, வீட்டுவரி உள்ளிட்டவற்றை செலுத்த வந்தோம். 500, 1000 ரூபாயினைக் கொண்டு இன்று மாநகராட்சியில் வரிசெலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இருப்பினும் நேற்று மாலை நேரத்தில் அறிவித்துவிட்டு இன்று ஒரு நாள் மட்டும் அவகாசம் அளித்திருப்பது போதுமானது அல்ல. பலருக்கும் இதுகுறித்த தகவல் சென்றடையவில்லை.



இதனால், பலரும் வங்கி, தபால் நிலையத்தில் 500, 1000 ரூபாய்களை மாற்றிக் கொண்டு வந்து இங்கு காத்திருக்கின்றனர். முன்னதாகவே இந்த அறிவிப்பினை வெளியிட்டிருந்தால் இன்னும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும். மேலும், வரியினைப் செழுத்த கூடுதல் வசதிகளை செய்ய வேண்டும்'' என்றனர்.



Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...