கோஹினூர் வைரத்தை மீட்க மத்திய அரசுக்கு நோட்டீஸ்

புதுடில்லி: பிரிட்டனில் உள்ள கோஹினூர் வைரத்தை மீட்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பரிசா

இந்தியாவிற்கு சொந்தமான கோஹினூர் வைரம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திருடப்பட்டு, தற்போது பிரிட்டன் வசம் உள்ளது. இதனை மீட்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஏற்கனவே ஆஜராகி பதிலளித்த மத்திய அரசு, கோஹினூர் வைரம் திருடப்படவில்லை. 1849 ம் ஆண்டு, சீக்கிய போரில் உதவியதற்காக மகாராஜா ரஞ்சித் சிங்கால் கிழக்கிந்திய கம்பெனிகளுக்கு பரிசாக வழங்கப்பட்டது. அதனை பலவந்தமாக கேட்க முடியாது என பதிலளித்திருந்தது.

அரசின் இந்த பதிலை ஏற்க மறுத்து, தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இவ்வழக்கை இன்று மீண்டும் விசாரித்த சுப்ரீம் கோர்ட், கோஹினூர் வைரத்தை மீட்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரத்திற்குள் பதிலளி்க்க வேண்டும் என மத்திய அரசிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...