கோஹினூர் வைரத்தை மீட்க மத்திய அரசுக்கு நோட்டீஸ்

புதுடில்லி: பிரிட்டனில் உள்ள கோஹினூர் வைரத்தை மீட்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பரிசா

இந்தியாவிற்கு சொந்தமான கோஹினூர் வைரம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திருடப்பட்டு, தற்போது பிரிட்டன் வசம் உள்ளது. இதனை மீட்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஏற்கனவே ஆஜராகி பதிலளித்த மத்திய அரசு, கோஹினூர் வைரம் திருடப்படவில்லை. 1849 ம் ஆண்டு, சீக்கிய போரில் உதவியதற்காக மகாராஜா ரஞ்சித் சிங்கால் கிழக்கிந்திய கம்பெனிகளுக்கு பரிசாக வழங்கப்பட்டது. அதனை பலவந்தமாக கேட்க முடியாது என பதிலளித்திருந்தது.

அரசின் இந்த பதிலை ஏற்க மறுத்து, தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இவ்வழக்கை இன்று மீண்டும் விசாரித்த சுப்ரீம் கோர்ட், கோஹினூர் வைரத்தை மீட்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரத்திற்குள் பதிலளி்க்க வேண்டும் என மத்திய அரசிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...