ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்த இந்து மக்கள் கட்சி தலைவர் மீது வழக்கு

ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் மீது 2 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கருப்பு பணம் மற்றும் கள்ள பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தற்கு வரவேற்பு தெரிவித்து புதனன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத் தலைமையிலான அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்நிலையில், அனுமதியின்றி பட்டாசு வெடித்து கொண்டாடிய அர்ஜுன் சம்பத் உட்பட 6 பேர் மீது, சட்ட விரோதமாக கூடுதல், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை அஜாக்கிரதையாக  கையாளுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
இதனிடையே, இந்த வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ள உள்ளதாக அர்ஜீன்சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...