தேர்தலில் அபார வெற்றி: அமெரிக்க அதிபராக பதவியேற்கிறார் டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபராக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து வரும் ஆண்டு 2017 ஜனவரி  20ம் தேதி  அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். குடியரசு அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வானார். 276 வாக்குகளபை் பெற்று டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபரானார். அவரை எதிர்த்து நின்ற ஹிலாரி கிளிண்டன் 218 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார். அரசியல் பின்புலம்  அல்லாத ஒருவர் அமெரிக்க அதிபாராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்க அதிபர்களில் மிகவும் வயதான  அதிபரும் டொனால்டு டிரம்ப்பே ஆவார். இதனையடுத்து, வரும் டிசம்பர் 19ம் தேதி  பிரதிநிதிகள் கூடி  முறைப்படி அதிபரை தேர்வு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் தேர்வுடன் துணை  அதிபர்  தேர்வும் நடைபெறுகிறது. துணை  அதிபருக்கு ஜனநாயக கட்சி சார்பில் டிம்கைனே,  குடியரசுக் கட்சி சார்பில் மைக்பென்ஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. தற்போதைய அமெரிக்க அதிபராக பராக்  ஒபாமா உள்ளார்.  அவரது பதவிக்காலம் 2017 ஜனவரி 20ம் தேதியுடன் முடிவடைகிறது.  எனவே, அமெரிக்காவின் 45வது புதிய அதிபரை தேர்வு செய்யும்  தேர்தல், அமெரிக்க நாட்டு  பாரம்பரியப்படி நவம்பர் மாதம் வரும் முதல்  திங்கட்கிழமைக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமையான  நேற்று நடைபெற்றது. முக்கிய கட்சிகளான ஜனநாயக கட்சி  சார்பில் ஹிலாரி  கிளின்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு   டிரம்பும் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர்.

நேற்று முன்தினம் பிரசாரம் முடிந்து திட்டமிட்டபடி நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 20 கோடி பேர் இந்த  தேர்தலில் ஓட்டு போட  முன்பதிவு செய்து இருந்தனர். அவர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று  தங்கள் ஓட்டுக்களை செலுத்தினர்.  இந்த ஓட்டுப்பதிவு முடிந்ததும் அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் வாக்கு எண்ணப்பட்டது. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்  டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

ஹிலாரி கிளிண்டன் வாழ்த்து

அமெரிக்க அதிபராக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து வரும் ஆண்டு 2017 ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...