பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க மாநகராட்சி ''மை ஷாப்பிங் மை பேக்'' திட்டம் அறிமுகம்.


கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் ''மை ஷாப்பிங் மை பேக்' என்ற புதிய அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் முழுக் குறிக்கோள் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து அதுகுறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஆகும்.

கோவை மாநகராட்சி, சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர் அமைப்புகள் ஆகியோர் இணைந்து துவங்கப்பட்டுள்ள இந்த அமைப்பு மக்களிடம் பிளாஸ்டிக் பைகள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது. மேலும், எவ்வாறு பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கலாம் என்பதை விவாதிக்கும் வகையில் ஒரு வாட்ஸ்அப் குழுவும் துவங்கப்பட்டுள்ளது. 

மை ஷாப்பிங் மை பேக் அமைப்பின் எல்.டிம்பில் தலைமையில் துவங்கப்பட்டுள்ள இந்த வாட்ஸ்அப் குழுவில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை கட்டுப்படுத்துவது, அதனால் ஏற்படும் நன்மைகள், நோக்கம் உள்ளிட்டவை விவாதிக்கப்படும். 



இதுகுறித்து சித்ரா ரவீந்திரன் கூறுகையில், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்க முதற்கட்டமாக வணிக நிறுவன உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் வீட்டில் இருந்தே பைகளை எடுத்து வர உரிமையாளர்கள் வலியுறுத்த வேண்டும். இதற்கு அனைத்து நிறுவன உரிமையாளர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார்.

பி.கவிதா கூறுகையில், குடியிருப்பு பகுதியில் உள்ள தையலகக் கடைக்காரர்கள் இதற்கு ஆதரவளிக்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணியினால் பைகளை செய்து விநியோகிக்க வேண்டும் என்றார்.

பிளாஸ்டிக் பயன்பாட்டினை ஒழிக்கும் இத்திட்டத்திற்கு கிருஷ்ணா கல்லூரி மாணவர்களும் தங்களது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். அக்கல்லூரி மாணவர்களே துணியினால் தயாரிக்கப்பட்ட பையினை கடைகளுக்கு விநியோகித்து வருகின்றனர்.

மை ஷாப்பிங் மை பேக் அமைப்பின் சார்பில் அனைத்து வணிக வளாகங்களிலும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இதனை பின்தொடரும் வணிக நிறுவனம் குறித்து புள்ளிவிவரம் சேகரிக்கவும் அதனை மாநகராட்சியிடம் ஒப்படைக்கவும் திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் நவம்பர் 10ம் தேதிக்குள் குறைந்தளவு நூறு நிறுவனத்திலாவது பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை முற்றிலும் தவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும், கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட கோவை வடக்கு, தெற்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தன்னார்வலர் அமைப்பிலிருந்து மொத்தம் 10 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மை ஷாப்பிங் மை பேக் அமைப்புடன் இணைந்து ஒவ்வொரு பகுதியிலும் இதுகுறித்தான விழிப்புணர்வில் ஈடுபடுவர். இதுகுறித்து மேலும் தகவலுக்கு 94433 44731 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...