மத்திய அரசின் மலிவு விலை மருந்துக் கடை- மக்கள் மகிழ்ச்சி


மத்திய அரசின் ''ஜன் அவுஷதி'' திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள மலிவு விலை மருந்துக் கடைகளினால் மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதைத் தொடர்ந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

மக்கள் அதிகம் உபயோகிக்கக் கூடிய மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட அத்யாவசிய முக்கிய மருந்துகளின் விலையில் கட்டுப்பாட்டினைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி, கோவை மாவட்டத்தில் முதற்கட்டமாக 25 பகுதிகளில் ஜன் அவுஷதி மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. 



இந்த மருந்துக் கடைகளில் சுமார் 400, 500 ரூபாய்க்கு தனியார் அல்லது வெளிக்கடைகளில் வாங்கப்படும் மருந்துகள் இந்த ஜன் அவுஷத் மருந்தகத்தில் வெறும் 40 முதல் 50 ரூபாய்க்கே கிடைப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 



இத்திட்டத்தின் கீழ் கோவை இராமநாதபுரம் பகுதியில் திறக்கப்பட்டுள்ள மருந்தகத்தின் உரிமையாளர் கூறுகையில், ''தனியார் மருந்துக் கடைகளில் மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இனி மக்களுக்கு இல்லை. மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவார்கள். பொதுமக்களிடையே இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது'' என்றார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...