பறவை காய்ச்சல் பரவலை தடுப்பது தொடர்பாக ஆட்சியர், கால்நடைதுறை, சுகாதார துறை அதிகாரிகள் ஆலோசனை


கேரளாவில் பறவை காய்ச்சல் பரவிவரும் நிலையில் கோவையில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான நோய் தடுப்பு மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோயானது வேகமாக பரவி வருகின்றது.இந்நிலையில் தமிழகத்தில் பறவை காய்ச்சலானது பரவி விடாமல் இருக்க நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.குறிப்பாக தமிழக கேரள எல்லையோரம் இருக்கும் மாவட்டங்கள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டு கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் அனைத்தும் கிருமிநாசினி தெளித்த பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக இன்று மாலை முகாம் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆட்சியர் ஹரிகரன் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் கால்நடைபராமரிப்பு துறை, சுகாதார துறை, வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோருடன் கோழி பண்ணை உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.இந்த ஆலோசனை கூட்டத்தின் போது கேரளாவில் இருந்து வாத்து, முட்டை, கோழி தீவனங்கள் போன்றவை ஏற்றி வரும் வாகனங்களை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும் கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் 12 வழித்தடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள் 36 குழுக்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மறு உத்திரவு வரும் வரை தொடந்து ஈடுபடவும் ஆட்சியர் ஹரிகரன் அதிகாரிகளுக்கு அறிவுத்தினார்.மேலும் நோய் கிளர்ச்சி ஏற்பட்டால் அதை உடனடியாக கட்டுப்படுத்தும் பொருட்டு தேவையான மருத்துவ உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க உத்திரவிட்ட ஆட்சியர், நோய் தடுப்பிற்காக பயிற்சி அளிக்கப்பட்ட 40 அதிரடி குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் ஆட்சியர் ஹரிகரன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...