தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிப்பு

நாடெங்கிலும் 31.10.2016 முதல் 05.11.2016 வரை பொது வாழ்வில் தூய்மை மற்றும் ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க வலியுறுத்தி, இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாளை ஒட்டி, அனுசரிக்கப்பட்டு வரும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தின் ஒரு பகுதியாக தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் ஊழியர்களிடையே விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், சேலம் ரயில்வே கோட்ட கூடுதல்மேலாளர் சந்திரபால் ஊழியர்களுக்கு கண்காணிப்பு உறுதிமொழி செய்து வைத்தார். சேலம் கோட்ட முதுநிலை மின்பொறியாளர் பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார். 



நிகழ்ச்சியில் சேலம் தமிழக அரசு காவல் துறை கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் துணைக் கண்காணிப்பாளர் சந்திரமௌலி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஏற்காடு மான்ட்போர்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.ஜே. ஜார்ஜ் பேசுகையில் ரயில்வே ஊழியர்கள் ரயில்வே சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பதில் மட்டுமன்றி, தங்களது அன்றாட பணிகளையும் ஊழல் கறை இன்றி தூய்மையாக வைத்திருப்பது அவசியம் என்று கூறினார். தெற்கு ரயில்வே தலைமையக துணைத் தலைமை கண்காணிப்பு அதிகாரி காயத்ரி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். சேலம் கோட்ட ஒருங்கிணைப்பு வணிக மேலாளர்  விஜுவின் நன்றியுரை வழங்கினார்.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...