லஞ்ச ஒழிப்பு வாரம் அவினாசிலிங்கம் மாணவிகள் விழிப்புணர்வு பேரணி


இந்திய அரசாங்கத்தின் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் சார்பில் கனரா வங்கி ஆண்டுதோறும் 31-5-2016 முதல் 5-11-2016 வரை லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக அனுசரித்து வருகிறது. இன்று கனரா வங்கி, அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2000 மேற்பட்ட மாணவ, மாணவிகளை கொண்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



பேரணி நிறைவு பெற்றவுடன் அவினாசிலிங்கம் பல்கலைக்கழக கலையரங்கில் கோவை மாவட்ட உதவி காவல்துறை கண்காணிப்பாளர் முத்தரசு விழிப்புணர்வு பற்றி மாணவர்களிடையே உரையாற்றினார்.



பின்னர் பேசிய கனரா வங்கி துணை பொதுமேலாளர் பரமசிவம் விழிப்புணர்வு வாரம் பற்றிய அனுசரிப்பு பற்றி அவர் பேசுகையில்; இந்திய முழுவதும் இந்த வாரம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்பட்டடு வருகிறது. நாடு முழுவதும் உள்ள லஞ்ச ஒழிப்பு முற்றிலும் தடை செய்வதற்காக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கொண்டு செல்லப்படுகிறது. அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் மாணவர்கள் மூலமாக இந்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது இதில் 2000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் வருங்காலத்தில் லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தவறு என்று உணர்த்தும் வகையில் மாணவர்களுக்காக இந்தப்பேரணி நடைபெற்றது. மேலும் மாணவர்களுக்கு லஞ்சம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 கல்லூரிகள் மற்றும் 17 பள்ளிகளில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பற்றி மாணவர்களுக்கு கூறப்படும் என கூறினார். 



இதில், அவினாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் கிருஷ்ணகுமார், துணை வேந்தர் பிரேமவதி விஜயன், பல்கலைக்கழக பதிவாளர் வெண்மதி, கனரா வங்கி அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...