வெள்ளியால் இழைக்கப்பட்ட வீடுகள் தங்கம், பிளாட்டுகள்.. ஆந்திராவை அதிர வைத்த அரசு அதிகாரியின் ஊழல்


14 வீடுகள், வெள்ளி பொருட்களாலே வார்த்து இழைக்கப்பட்ட அறைகள், 1 கிலோ எடைக்கு தங்க பொருட்கள் என குவித்து வைத்துள்ளது வேறு யாருமல்ல, ஆந்திராவில், போக்குவரத்து துறையில் பணியாற்றும் சாமானிய அரசு ஊழியர்தானாம். பணிக்கு சேர்ந்து 34 வருடத்தில் இத்தனை சொத்துக்களை குவித்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரை திகைக்க வைத்துள்ளார், 55 வயதாகும் பூர்ணச்சந்திர ராவ்.

1981ம் ஆண்டு, மோட்டார் வாகன இன்ஸ்பெக்டராக பணியை தொடங்கிய பூர்ணச்சந்திர ராவின், வாழ்க்கை, இப்படி பூத்து குலுங்கியது எப்படி என்று தலையை பிய்த்துக்கொள்கிறார்கள் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்.

குண்டூர், ஓங்கோல் மற்றும் நெல்லூர் நகரங்களில் இவர் பணியாற்றியபோது சட்டத்திற்கு விரோதமாக லஞ்சப் பணத்தை வாங்கி குவித்திருப்பது இந்த சொத்துக்களின் மூலம் அம்பலமாகியுள்ளது. இவருக்கு வினுகோண்டா பகுதியில் 7 அப்பார்மென்டுகள், 2 வீடுகள், குண்டூரில் 1 வீடு, ஹைதராபாத் மற்றும் விஜயவாடா நகரங்களில் தலா 2 பிளாட்டுகள் சொந்தமாக உள்ளன. வினுகோண்டாவில் இவர் ஒரு, தானிய மில்லுக்கு ஓனரும் கூட என தெரியவந்துள்ளது

இத்தனையும் அம்பலமான பிறகும், தான் ஒரு ஒழுக்க சீலன் என கூறிவருகிறார் பூர்ணசந்திரராவ். தனது சொத்து மதிப்பு ரூ.3 கோடிதான் என்றும், இது வருமானத்திற்கு உட்பட்டதுதான் எனவும் அவர் கூறுகிறார். ஆனால் குறைந்தபட்சம் என்றாலும், ரூ.25 கோடிக்கும் குறையாக சொத்துக்கள் பூர்ணசந்திரராவுக்கு இருக்கும் என்கிறார்கள் லஞ்ச ஒழிப்பாளர்கள். தொடர்ந்து சொத்துக்களை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...